என் மலர்
செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் குன்னூருக்கு மாநில பேரிடர் மீட்பு குழு வருகை தந்துள்ளனர்
குன்னூர் பகுதியில் 30 இடங்களில் மண்சரிவு - பேரிடர் மீட்பு குழு வருகை
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் 30 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகளும், மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
குன்னூர் பகுதியில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி என்ற பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டின் சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
இதேபோல் குன்னூர்- பழைய அருவங்காடு பகுதியில் உள்ள சாலையில் இருந்த மரம் முறிந்து விழுந்து வெடிமருந்து தொழிற்சாலையின் கட்டிடம் சேதம் அடைந்தது. மவுண்ட்பேட்டன் சாலையில் 4 இடங்களில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில இடங்களிலும் மரங்கள் சாலைகளின் நடுவே விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதேபோல் குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து ஓட்டுப்பட்டறை செல்லும் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
இதனை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கோவையில் இருந்து தீயணைப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான 60 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் குன்னூர் சென்று குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 2 வண்டிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே குன்னூர் பகுதிக்கு 40 பேர் கொண்ட மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் வந்துள்ளனர். அவர்கள் பர்லியார், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று குன்னூரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மஞ்சூரில் நேற்று காலை 11 மணியளவில் தேவர் சோலை என்ற இடத்தில் மழைக்கு மண்சரிந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்ணை அகற்றி போக்குவரத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
குந்தாபாலம் மேட்டுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் 15 இடங்களில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. இதையடுத்து அந்த பகுதியில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மழை குறையும் வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பகல் நேரங்களில் வீடுகளிலும், இரவு நேரத்தில் முகாம்களிலும் தங்கி வருகின்றனர். இதேபோல் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ராக்கி என்பவரின் வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர் மழை காரணமாக குந்தா, அவலாஞ்சி, அப்பர்பவானி அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதால் பந்தலூர் மற்றும் தேவாலா தாலுகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
ஊட்டி-11, நடுவட்டம்-20, கிளன்மார்கன்-1, குந்தா-12, அவலாஞ்சி-11, கெத்தை-14, எமரால்டு-8, கிண்ணக்கொரை-22, அப்பர்பவானி-22, குன்னூர்-11, கேத்தி-4, கோத்தகிரி-6, கொடநாடு-11, கூடலூர்-11, தேவாலா-59.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகளும், மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
குன்னூர் பகுதியில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி என்ற பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டின் சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
இதேபோல் குன்னூர்- பழைய அருவங்காடு பகுதியில் உள்ள சாலையில் இருந்த மரம் முறிந்து விழுந்து வெடிமருந்து தொழிற்சாலையின் கட்டிடம் சேதம் அடைந்தது. மவுண்ட்பேட்டன் சாலையில் 4 இடங்களில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில இடங்களிலும் மரங்கள் சாலைகளின் நடுவே விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதேபோல் குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து ஓட்டுப்பட்டறை செல்லும் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
இதனை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கோவையில் இருந்து தீயணைப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான 60 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் குன்னூர் சென்று குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 2 வண்டிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே குன்னூர் பகுதிக்கு 40 பேர் கொண்ட மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் வந்துள்ளனர். அவர்கள் பர்லியார், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று குன்னூரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மஞ்சூரில் நேற்று காலை 11 மணியளவில் தேவர் சோலை என்ற இடத்தில் மழைக்கு மண்சரிந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்ணை அகற்றி போக்குவரத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
குந்தாபாலம் மேட்டுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் 15 இடங்களில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. இதையடுத்து அந்த பகுதியில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மழை குறையும் வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பகல் நேரங்களில் வீடுகளிலும், இரவு நேரத்தில் முகாம்களிலும் தங்கி வருகின்றனர். இதேபோல் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ராக்கி என்பவரின் வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர் மழை காரணமாக குந்தா, அவலாஞ்சி, அப்பர்பவானி அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதால் பந்தலூர் மற்றும் தேவாலா தாலுகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
ஊட்டி-11, நடுவட்டம்-20, கிளன்மார்கன்-1, குந்தா-12, அவலாஞ்சி-11, கெத்தை-14, எமரால்டு-8, கிண்ணக்கொரை-22, அப்பர்பவானி-22, குன்னூர்-11, கேத்தி-4, கோத்தகிரி-6, கொடநாடு-11, கூடலூர்-11, தேவாலா-59.
Next Story






