என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப் பள்ளம், வானவன் மகா தேவி உள்ளிட்ட மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடந்த 4,5-ந் தேதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடுகளிலே முடங்கி கிடந்தனர். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் படகுகள் அனைத்தும் கரையோரத்தில் பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மீனவர்கள் பிடிக்க செல்லததால் மீன்வரத்து இல்லை. இதனால் சில்லரை மீன் வியபாரிகள் கடற்கரை சென்று ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று (6-ந் தேதி) கடலில் பலமாக காற்று வீசியதால் 3-வது நாளாக மீனவர்கள் பலர் மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சில மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க சென்றனர்.






