search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஈரோட்டில் பெண் கழுத்து அறுப்பு- கள்ளக்காதலன் சிக்கினார்

    ஈரோட்டில் பெண் கழுத்து அறுத்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே கதிரம்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி சுதா (வயது34). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    காளிமுத்து தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். சுதா மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்திலையில் கடந்த ஒரு வாரமாக சுதா செல்போன் கடைக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று குழந்தைகள் பள்ளி கூடத்துக்கு சென்று விட்டனர். காளிமுத்து வேலைக்கு சென்று விட்டார்.

    மாலையில் வீட்டுக்கு வந்த காளிமுத்து மனைவி சுதா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தார். ஆனால் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் கதிரம்பட்டியில் உள்ள ஒரு காலி இடத்தில் இரவு 10.15 மணியளவில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுதா உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய சுதாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சுதா கழுத்தறுக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.

    சுதா வேலைப்பார்த்த செல்போன் கடை உரிமையாளர் கோகுல் (29). இவரது கடையில் சுதா கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வேலை பார்த்து வந்தார். அப்போது சுதாவுக்கும் கோகுலுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சுதா செல்போனில் அடிக்கடி யாரிடமோ பேசி வந்தார். இது கோகுலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுதாவை வேலையிலிருந்து கோகுல் நீக்கினார்.

    இருந்தாலும் கோகுலால் சுதாவை மறக்க முடியவில்லை. சம்பவத்தன்று சுதாவை போனில் தொடர்பு கொண்ட கோகுல் உன்னை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பி சுதாவும் கரம்பட்டியில் உள்ள காலி இடத்திற்கு சென்றார்.

    அப்போது கோகுலுக்கும் சுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கோகுல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாவின் கழுத்தை அறுத்து உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

    இந்நிலையில் கோகுலை தாலுகா போலீசார் இன்று பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் அவர் எதற்காக சுதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்று முழுமையான காரணம் தெரியவரும்.
    Next Story
    ×