என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறையில் இன்று எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம்
Byமாலை மலர்23 July 2019 7:45 AM GMT (Updated: 23 July 2019 7:45 AM GMT)
மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் வியாபாரிகள் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் மாயூரம் வழக்குரைஞர் சங்க தலைவர் ராம.சேயோன், மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்க தலைவர் வேலுகுபேந்திரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏ. வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்ததும் தனி மாவட்டம் உருவாக்குவது சம்மந்தமாக பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்று போலீசார் கூறினர்.
அதனை ஏற்று வக்கீல்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் வியாபாரிகள் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் மாயூரம் வழக்குரைஞர் சங்க தலைவர் ராம.சேயோன், மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்க தலைவர் வேலுகுபேந்திரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏ. வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்ததும் தனி மாவட்டம் உருவாக்குவது சம்மந்தமாக பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்று போலீசார் கூறினர்.
அதனை ஏற்று வக்கீல்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X