search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advocates protest"

    கோவை மாவட்டத்தில் இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சூலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு மற்றும் வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் வக்காலத்தில் போட்டோ ஒட்ட எதிப்பு தெரிவித்தும், விபத்து வழக்குகள் மற்றும் வீட்டு உரிமையாளர், வாடகை தாரர் வழக்குகளை அதற்கான நீதி மன்றத்தில் மட்டுமே விசாரிக்க வேண்டும். சமரச தீர்வு மையம் மூலம் நிலுவை வழக்குகளை முடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற கட்டண உயர்வை மாற்றியமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சூலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரணை தேக்கம் அடைந்துள்ளது.
    ×