search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore protest"

    கோவை மாவட்டத்தில் இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சூலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு மற்றும் வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் வக்காலத்தில் போட்டோ ஒட்ட எதிப்பு தெரிவித்தும், விபத்து வழக்குகள் மற்றும் வீட்டு உரிமையாளர், வாடகை தாரர் வழக்குகளை அதற்கான நீதி மன்றத்தில் மட்டுமே விசாரிக்க வேண்டும். சமரச தீர்வு மையம் மூலம் நிலுவை வழக்குகளை முடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற கட்டண உயர்வை மாற்றியமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சூலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரணை தேக்கம் அடைந்துள்ளது.
    கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

    அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் வடவள்ளி நவாவூர் பிரிவில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் ஆர். 2017 என்ற கல்வி முறையை கொண்டு வந்து மாணவர்களை பாதிப்படைய செய்து உள்ளது. மேலும் பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., எம்.இ., எம்.பி.ஏ., படித்த ஆசிரியர்களை வைத்தே பாடம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆர் 2017 தேர்வு முறையை நடைமுறைப்படுத்தினால் கிராமபுறத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைவார்கள். தேர்வில் புதியதாக அமல்படுத்திய முறைகளை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் ஊர்வலமாக வந்து டீன் (பொறுப்பு) விக்ரமனிடம் மனு அளித்தனர். #tamilnews
    ×