search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐம்பொன் சிலைகள் கொள்ளை நடந்த கோவில்.
    X
    ஐம்பொன் சிலைகள் கொள்ளை நடந்த கோவில்.

    மானாமதுரை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

    மானாமதுரை அருகே உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஒரு கால பூஜை நடைபெறும். அர்ச்சகர் சீனிவாசன் பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது மூலஸ்தானத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய கரியமாணிக்க பெருமாள் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    சாமி சிலைகள் கொள்ளை போனது குறித்து மானாமதுரை குற்றப்பிரிவு போலீசில் அர்ச்சகர் சீனிவாசன் புகார் செய்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கொள்ளை போன சிலைகளின் மதிப்பு ரூ. 2½ லட்சம் இருக்கும் என தெரிகிறது.

    கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை போன சிலைகளை மீட்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×