search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே சென்னை பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்
    X

    ஆம்பூர் அருகே சென்னை பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

    ஆம்பூர் அருகே அரசு பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து 20 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர்:

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று இரவு தமிழக அரசு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ்சை திருத்தணியை சேர்ந்த டிரைவர் சீனிவாசன் (வயது 45). ஓட்டி வந்தார்.

    ஆம்பூர் அடுத்த சோலூர் என்ற இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புகள் மீது மோதி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறியபடி கூச்சலிட்டனர்.

    இதில் பஸ் டிரைவர் சீனிவாசன், ஒடுகத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (24). மூர்த்தி (25). திருவள்ளுரை சேர்ந்த தினேஷ்குமார், திருநெல்வேலியை சேர்ந்த வித்யாசாகர் (46). சென்னையை சேர்ந்த அன்பரசன், பாலய்யா, ஜான்சன், ராஜலட்சுமி, ரமேஷ், சூர்யா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×