search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு எதிரான ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்தது- கமல் கட்சி துணைத்தலைவர் கருத்து
    X

    மோடிக்கு எதிரான ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்தது- கமல் கட்சி துணைத்தலைவர் கருத்து

    மோடிக்கு எதிரான ஓட்டுக்கள் தான் எங்களுக்கு கிடைத்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். கட்சி தொடங்கி 14 மாதத்துக்குள் தேர்தலில் குதித்தார். கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு முழுமை பெறாவிட்டாலும் கூட தேர்தலில் அந்த கட்சிக்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது.

    கமலோடு மூன்றாம் இடத்துக்கு போட்டியிட்ட மற்ற கட்சிகளான அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி இரண்டும் ஓரளவு செல்வாக்கும் அனுபவமும் உள்ள கட்சிகள். அப்படி இருந்தும் 11 தொகுதிகளில் கமல் மூன்றாம் இடத்தை பெற்றார். 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்தார். கமல்ஹாசன் அடுத்து வரும் தேர்தல்களுக்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

    இதற்காக மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட உள்ளன. முக்கியமாக வரும் சட்டசபை தேர்தலுக்கு கமல் தீவிரமாக தயாராகி வருகிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    ‘எங்கள் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் அனைவரையும் அந்தந்த தொகுதி மக்களை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவிக்க அறிவுறுத்தி இருக்கிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் கட்சியை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம்.

    நாங்கள் தி.மு.க.வின் வாக்குகளை பிரித்ததாக கூறுகிறார்கள். எங்களுக்கு கிடைத்த ஓட்டு மோடிக்கு எதிரான ஓட்டுகள் தான். வாக்காளர்கள் இந்த தேர்தலை பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தலாகத் தான் பார்த்தார்கள். எனவே சட்டசபை தேர்தலில் எங்கள் வாக்கு சதவீதம் இன்னும் உயரும்.’

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×