search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார்
    X

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார்

    கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
    வேலூர்:

    அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென பேசியிருந்தார்.

    இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் தலைமையில் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டிக்கதக்கது.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

    தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், நந்தகோபால், கிரிராஜ், சேகர், மணி, சிவராமன், சந்தோஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×