search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைதாப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.3 லட்சம்-நகை கொள்ளை
    X

    சைதாப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.3 லட்சம்-நகை கொள்ளை

    சைதாப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.3 லட்சம்-நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சைதாப்பேட்டை, ஆஸ்பத்திரி சாலையில் வசித்து வருபவர் சந்துரு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிதம்பரத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார்.

    இன்று காலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம், 3 லேப்-டாப் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மனைவி சகான்அலி. இவரது வீட்டு பீரோவில் 15 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது. கடந்த 10-ந்தேதி நகை- பணம் இருப்பதை சகான்பீவி பார்த்துள்ளார்.

    நேற்று பீரோவை திறந்து பார்த்தபேது நகை- பணத்தை காணவில்லை. நகைகள் மாயமானது குறித்து சகான்பீவி பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    Next Story
    ×