search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைகளில் கூலிங் ‘பீர்’ கிடைக்க 2 ஆயிரம் குளிர்சாதன பெட்டி
    X

    டாஸ்மாக் கடைகளில் கூலிங் ‘பீர்’ கிடைக்க 2 ஆயிரம் குளிர்சாதன பெட்டி

    டாஸ்மாக் கடைகளில் கூளிங் பீர் கிடைக்க டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆயிரம் குளிர் சாதன பெட்டிகளை கொள்முதல் செய்து அதை மதுக்கடைகளுக்கு வழங்கி வருகிறது. #TNTasmac
    சென்னை:

    தமிழ்நாட்டில் ‘அக்னி நட்சத்திரம்’ வெயில் தொடங்குவதற்கு முன்பே வேலூர், திருத்தணி, மதுரை, சேலம் உள்பட பல மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.

    சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாத குடிமகன்கள் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு சென்று ‘பீர்’ குடிப்பது அதிகமாகி உள்ளது.

    அப்போது ‘பீர்’ கூலிங்காக இல்லாவிட்டால் கடைக்காரர்களுடன் வாக்கு வாதம் செய்கின்றனர். பல கடைகளில் குளிர் சாதன பெட்டி பழுதாகி கிடப்பதால் ‘கூலிங் பீர்’ கொடுக்க முடிவதில்லை.

    இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மழை காலத்தை விட வெயில் காலத்தில் தான் பீர் விற்பனை அதிகரிக்கும்.

    எனவே, பழைய குளிர் சாதன பெட்டிகளை மாற்றி விட்டு புதிய குளிர்சாதன பெட்டிகளை தந்தால்தான் பீர் விற்பனை அதிகரிக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று நிர்வாகத்தின் தரப்பில் பழுதாகி செயல்படாத குளிர்சாதன பெட்டிகள் எத்தனை கடைகளில் உள்ளது என கணக்கெடுக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கடைகளுக்கு புதிய குளிர்சாதன பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆயிரம் குளிர் சாதன பெட்டிகளை கொள்முதல் செய்தது. அதை மதுக்கடைகளுக்கு இப்போது வழங்கி வருகின்றனர்.

    இதனால் சென்னையில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் ‘கூலிங் பீர்’ தட்டுப்பாடின்றி கிடைப்பதாக குடிமகன்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். #TNTasmac
    Next Story
    ×