search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலில் விடுபட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்- அமைச்சர் காமராஜ் பேட்டி
    X

    கஜா புயலில் விடுபட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்- அமைச்சர் காமராஜ் பேட்டி

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் வழங்கபடவில்லை. இன்னும் சில நாட்களில் விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #ministerkamaraj #relief #gajacyclone

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். சிறு சிறு கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க கட்சியின் தலைமை ஆலோசனை செய்து வருகிறது. பட்ஜெட்டில் மக்கள் பயன்படும் திட்டங்களும் தற்போதைய செயல்பாட்டு திட்டங்களுக்கும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுதேர்தல் நோக்கத்திற்காக போடப்பட்ட கவர்ச்சி பட்ஜெட் இல்லை. தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் வழங்கபடவில்லை என அங்கங்கே போராட்டம் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார். #ministerkamaraj #relief #gajacyclone 

    Next Story
    ×