என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

தஞ்சை அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

தஞ்சாவூர்:
தஞ்சை-கும்பகோணம் சாலையில் உள்ள திட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவர் மகேஸ்வரனிடம் சென்று தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மகேஸ்வரன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருடன் சென்று வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியிடம் முறைகேடாக பழகி அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகியதில் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மகேஸ்வரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
