search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை - துப்பு கிடைக்காததால் போலீசார் திணறல்
    X

    ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை - துப்பு கிடைக்காததால் போலீசார் திணறல்

    ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் கோலநல்லி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). மார்பிள்ஸ் காண்டிராக்டர். இவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 லட்சத்தை கொடுப்பதற்காக சூட்கேசில் எடுத்து கொண்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏ.சி. பெட்டியில் சென்றார்.

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது மர்மநபர்கள் பணம் இருந்த சூட்கேசை பெரியசாமிக்கு தெரியாமல் திருடிச்சென்றனர். அதில் இருந்த ரூ. 10 லட்சத்தை எடுத்து விட்டு காலியான சூட்கேசை ஆம்பூர் அடுத்த பச்சகுப்பத்தில் தண்டவாளத்தில் வீசி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ரெயில் மொரப்பூரில் நின்ற போது பெரியசாமி பெட்டியை பார்த்துள்ளார். அதன் பிறகு தூங்கியுள்ளார். ஜோலார்பேட்டையை ரெயில் கடந்த பிறகு அவர் கண் விழித்து பார்த்துள்ளார்.

    அப்போது பெட்டியுடன் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஆம்பூரில் ரெயில் நின்றுள்ளது. ஆம்பூரை கடந்து பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பெட்டியை வீசியுள்ளனர்.

    அதன் பிறகு ரெயில் குடியாத்தத்தில் நின்றது. இதனால் கொள்ளையர்கள் குடியாத்தத்தில் இறங்கி தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குடியாத்தம் ரெயில் நிலையத்தில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் குடியாத்தத்திற்கு பின்னர் காட்பாடி, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. ஒருவேளை கொள்ளையர்கள் இந்த ரெயில் நிலையங்களில் இறங்கி தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    Next Story
    ×