என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை - அமைச்சர் காமராஜ்
Byமாலை மலர்14 Dec 2018 3:39 AM GMT (Updated: 14 Dec 2018 3:39 AM GMT)
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என அமைச்சர் காமராஜ் கூறினார். #MinisterKamaraj #ADMK
திருவாரூர்:
திருவாரூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பயனாளிகளுக்கு தார்ப்பாய் மற்றும் 27 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை வழங்கிய அமைச்சர் காமராஜ் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.19 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மத்திய அரசு, தமிழக அரசிடம் கேட்டுள்ள கூடுதல் தகவல் விரைவில் வழங்கப்படும். இதனை தொடர்ந்து உரிய நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.
முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிப்பார்கள். பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என்ற நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது. இது தமிழக அரசுக்கு ஒருபோதும் பின்னடைவாக இருக்காது.
செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்வது குறித்து எங்களுக்கு கவலையில்லை. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். #MinisterKamaraj #ADMK
திருவாரூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பயனாளிகளுக்கு தார்ப்பாய் மற்றும் 27 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை வழங்கிய அமைச்சர் காமராஜ் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.19 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மத்திய அரசு, தமிழக அரசிடம் கேட்டுள்ள கூடுதல் தகவல் விரைவில் வழங்கப்படும். இதனை தொடர்ந்து உரிய நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.
முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிப்பார்கள். பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என்ற நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது. இது தமிழக அரசுக்கு ஒருபோதும் பின்னடைவாக இருக்காது.
செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்வது குறித்து எங்களுக்கு கவலையில்லை. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். #MinisterKamaraj #ADMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X