search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூரில் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது
    X

    ஆம்பூரில் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

    ஆம்பூரில் மாணவியை கடத்தி சென்று பெங்களூருவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, ஆம்பூர் மோட்டுக்கொல்லையை சேர்ந்த அர்ப்பான் (வயது 24), நியூபெத்லகேமை சேர்ந்த இர்பான்கான் (22), மு.க.கொல்லையை சேர்ந்த முதஸீர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் கடத்தினர். காரில் பெங்களூருவுக்கு சென்று அங்கு ஒரு விடுதியில் மாணவியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பள்ளி மாணவியை காணாமல் தவித்த பெற்றோர் இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசிலும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியை கடத்தி சென்ற கும்பலை தேடி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த அந்த கும்பல் மாணவியை பெங்களூரில் விட்டுவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து போலீசார் பெங்களூரு சென்று மாணவியை மீட்டு வந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ப்பான், இர்பான்கான், முதஸீர் ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×