search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாவட்ட மின்ஊழியர்களை கருணாஸ் எம்.எல்.ஏ. சந்தித்த போது எடுத்தபடம்.
    X
    மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாவட்ட மின்ஊழியர்களை கருணாஸ் எம்.எல்.ஏ. சந்தித்த போது எடுத்தபடம்.

    புயல் நிவாரண பணிகளில் ஈடுபடும் மின் ஊழியர்களை உற்சாகப்படுத்திய கருணாஸ்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் மின் ஊழியர்களை கருணாஸ் சந்தித்து பேசினார். #GajaCyclone #Karunas
    பேராவூரணி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வருகிறது.

    புயலில் சேதமான மரங்கள், மின்கம்பங்கள், உள்ளிட்டவை சரி செய்வதற்காக மின் ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். இருந்த போதிலும் கிராமங்களில் முழுமையாக மின்விநியோம் சென்றடையவில்லை.

    மின்கம்பங்களை சரிசெய்வதற்காக மாவட்டங்களில் உள்ள மின் ஊழியர்கள் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் உள்ள ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி பகுதியை பார்வையிட இன்று நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வந்திருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தார். பின்னர் மின் கம்பங்களை சரிசெய்வதற்காக திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, பேராவூரணியில் தங்கியிருந்து மீட்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை கருணாஸ் சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வந்து மீட்பு பணியில் ஈடுபடும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இன்று குருவிக்கரம்பை முனுமாக்காடு அரசு பள்ளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    Next Story
    ×