search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழிலாளி பலி
    X

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழிலாளி பலி

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீஞ்சூர்:

    மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில் 3-ம் நிலையில் விரிவாக்க பனிநடைபெற்று வருகிறது.

    இதில் பீகார் மாநிலம் லகரியா லேகர் கிராமத்தைச் சேர்ந்த ரிகே‌ஷன் (53) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ரிகே‌ஷனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஊழியர்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரிகே‌ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்டூர் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்

    Next Story
    ×