என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆணவ கொலை- பெண்ணின் தந்தை உள்பட 7 பேருக்கு 5-ந்தேதி வரை காவல்
Byமாலை மலர்23 Nov 2018 1:39 PM GMT (Updated: 23 Nov 2018 1:39 PM GMT)
ஆணவ கொலை வழக்கில் கைதான பெண்ணின் தந்தை உள்பட 7 பேரையும் அடுத்தமாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். #HonourKilling
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த காதல் திருமண தம்பதியினர் நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், ஏற்கனவே சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சுவாதியின் பெரியப்பா அஸ்வதப்பா, உறவினர் வெங்கட்ராஜ், லட்சுமணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான கார் டிரைவர் சாமிநாதன் (வயது 30) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இவர் சூடுகொண்டபள்ளி அருகே உள்ள பலவனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவரை தமிழக போலீசார் கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை வழக்கில் இதுவரை 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை 7 செல்போன்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கைதான 7 பேரையும் கர்நாடக போலீசார் மண்டியா அருகே மலஹள்ளியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை அடுத்தமாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 7 பேரும் மண்டியா கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கைதான பெண்ணின் தந்தை சீனிவாசன் உள்பட 3 பேரை போலீசார் ஓசூர் அழைத்து வந்து சம்பவம் நடந்த இடங்களை காட்டி விசாரித்தனர். இந்த விசாரணை விவரங்களை வீடியோவில் பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும், எதிர் தரப்பாளிகளும் ஓசூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கை ஓசூருக்கு மாற்ற கர்நாடக போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
60 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் கர்நாடக போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த வழக்கு ஓசூருக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.#HonourKilling
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த காதல் திருமண தம்பதியினர் நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், ஏற்கனவே சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சுவாதியின் பெரியப்பா அஸ்வதப்பா, உறவினர் வெங்கட்ராஜ், லட்சுமணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான கார் டிரைவர் சாமிநாதன் (வயது 30) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இவர் சூடுகொண்டபள்ளி அருகே உள்ள பலவனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவரை தமிழக போலீசார் கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை வழக்கில் இதுவரை 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை 7 செல்போன்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கைதான 7 பேரையும் கர்நாடக போலீசார் மண்டியா அருகே மலஹள்ளியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை அடுத்தமாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 7 பேரும் மண்டியா கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கைதான பெண்ணின் தந்தை சீனிவாசன் உள்பட 3 பேரை போலீசார் ஓசூர் அழைத்து வந்து சம்பவம் நடந்த இடங்களை காட்டி விசாரித்தனர். இந்த விசாரணை விவரங்களை வீடியோவில் பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும், எதிர் தரப்பாளிகளும் ஓசூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கை ஓசூருக்கு மாற்ற கர்நாடக போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
60 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் கர்நாடக போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த வழக்கு ஓசூருக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.#HonourKilling
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X