search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்ன?- சைதை துரைசாமி பட்டியல்
    X

    கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்ன?- சைதை துரைசாமி பட்டியல்

    சென்னை மேயராக பதவி வகித்தபோது கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்ன? என்பது குறித்து சைதை துரைசாமி பட்டியலிட்டுள்ளார். #ADMK #SaidaiDuraisamy #KolathurConstituency
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொளத்தூர் இரட்டை ஏரி 100 அடி சாலை சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை மூலம், மேம்பாலம் கட்டுவதற்கு இன்றைய முதல்-அமைச்சர், அன்றைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம், பலமுறை விண்ணப்பம் கொடுத்து, நேரிடையாக பார்வையிடச் செய்து, சுமார் ரூ.48 கோடி செலவில் மேம்பாலம் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதேபோல், கொளத்தூர் - வில்லிவாக்கம் எல்.சி.1 சந்திக்கடவின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு தடைகள் பல இருந்து கைவிடப்பட்ட இந்த திட்டம், 2012-2013 நிதிநிலை அறிக்கையில் என்னால் அறிவிக்கப்பட்டு, தற்போது சுமார் ரூ.58.5 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படவுள்ளன. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாட்டிற்காக கடந்த 25-10-2011 முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியால் ரூ.205 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டிலான 1,916 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    அதாவது, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 1,431 உட்புறச்சாலைகளில், 248 கான்கிரீட் சாலைகள் மற்றும் 943 உட்புற தார்சாலைகளை மேம்படுத்தும்பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பூங்கா, மாநகராட்சி கட்டிடம், பொதுக் கழிப்பிடம், மயானம், நடைபாதை, மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற அபிவிருத்திப் பணிகளின் மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ.205 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டிலான 1,916 பணிகள் நடைபெற்றுள்ளது.

    மேயர் நிதியின் கீழ் ரூ.8 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் 34 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை, 2 உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிகள், 15 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள், குளம் அபிவிருத்தி செய்யும் பணிகள், பள்ளிக்கட்டிடம் அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன.

    பேருந்து சாலைகள் துறையின் கீழ் ரூ.21 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 18.3 கிலோ மீட்டர் நீளத்தில், 34 பேருந்து சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 16 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்துறை மூலம் புதிதாக 832 மின்கம்பங்கள் அமைப்பது, 7 உயர்கோபுர மின் விளக்குகள் அமைப்பது, 17.3 கி.மீ. நீளத்தில் புதை மின் வடம் இடுவது மற்றும் 5,655 புதிய எல்.இ.டி. விளக்குகள் மாற்றும் பணி உள்ளிட்ட ரூ.10 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டிலான 60 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    மழைநீர் வடிகால்வாய் துறை மூலம் மழைநீர் வடிகால்வாய்கள் 19.53 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.19 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்துறை மூலம் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில், 3 பள்ளிக் கட்டிடம், ஒரு நகர நல்வாழ்வு நிலையம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணிக்காக இயந்திரப் பொறியியல் துறை மூலம் ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் 9 எண்ணிக்கையிலான கனரக காம்பாக்டர் வாகனங்களும், ரூ.91 லட்சம் செலவில் 6 எண்ணிக்கையிலான இலகு ரக காம்பாக்டர் வாகனங்களும் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

    கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சிப் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 663 மாணவ - மாணவியர்களுக்கு வண்ணச் சீருடைகளும், 5 ஆயிரத்து 254 மாணவ - மாணவியர்களுக்கு சைக்கிள்களும், 5 ஆயிரத்து 274 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.

    மாவட்ட குடும்ப நலத்துறை மூலம் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 786 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 1,418 பேருக்கு, ரூ.5 கோடியே 49 லட்சத்து 25 ஆயிரம் காசோலையாகவும் மற்றும் 5 ஆயிரத்து 672 கிராம் தங்க நாணயமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    விதவை, முதியோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு உதவித்தொகை கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி பெற்றுத்தரப்பட்டது. இது மட்டுமல்லாது குடிசைமாற்று வாரியம், வீட்டுவசதி வாரியம் போன்ற அரசின் பல்வேறு துறைகளின் மூலம் ஏராளமான நலத்திட்டப் பணிகள், அபிவிருத்தி பணிகள் போன்றவைகள் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அனைத்து மனுக்களின் மீதும் நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு சைதை துரைசாமி கூறியுள்ளார். #ADMK #SaidaiDuraisamy #KolathurConstituency
    Next Story
    ×