search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் பகுதியில் ரூ.3 கோடியே 20 லட்சத்தில் திட்டப்பணிகள்- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
    X

    கரூர் பகுதியில் ரூ.3 கோடியே 20 லட்சத்தில் திட்டப்பணிகள்- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

    கரூர் பகுதியில் ரூ. 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார். #MRVijayaBhaskar #ADMK
    கரூர்:

    கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, மண்மங்கலம், நன்னியூர், வாங்கல்குப்புச்சி பாளையம், நெரூர் வடக்கு, நெரூர் தெற்கு ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில், ரெட்டிபாளையம் பஸ்ஸ்டாப் முதல் பொன்நகர் வரை புதியதிசை மாற்று வடிகால் அமைக்கும் பணி ரூ.14.03 லட்சம் மதிப்பிலும், ஆப்பிள் பாரடைஸ் (கோவை ரோடு) பகுதியில், என்.ஜி.எம். ரோடு முதல் ஆப்பிள்பாரடைஸ் வரை பேவர் பிளாக் அமைக்கும் பணி ரூ.6.40 லட்சம் மதிப்பிலும், கோவை மெயின்ரோடு ஆண்டனி பள்ளி முதல் பி.கே.ஜி நகர் கல்வெர்ட் வரை புதிய திரை மாற்றுவடிகால் அமைக்கும் பணி ரூ.27.44 லட்சம் மதிப்பிலும், சாந்தி நகர் (ஈரோடு ரோடு) பகுதியில், சாந்திநகர் சாலை மேம்பாடு செய்யும் பணி ரூ.25.30  லட்சம் மதிப்பிலும் பூமி பூஜை நடந்தது. இதபோன்று பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகள் நடந்தன.

    முன்னதாக, பிரேம் மஹாலில் மகாத்மா காந்தியின் 150&வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தான உணவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் நடைபெற்ற சைக்கிள் பேரணியை  தொடங்கி வைத்தார்.  

    இந்நிகழ்ச்சியில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், செல்வி, பாலச்சந்தர், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், காளியப்பன், திருவிக, கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #MRVijayaBhaskar #ADMK
    Next Story
    ×