என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் தாசில்தார் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்3 Nov 2018 4:57 AM GMT (Updated: 3 Nov 2018 4:57 AM GMT)
திண்டுக்கல்லில் தாசில்தார் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகர் பால்சாமி அய்யர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் தாஜூதீன். இவர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு தாஜூதீன் மற்றும் அவரது மனைவி ஷாகிதா பானு ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டனர்.
இன்று காலை எழுந்து பார்த்தபோது ஷாகிதா பானுவின் 6½ பவுன் தங்க சங்கிலி மற்றும் தாஜூதீன் பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தாசில்தார் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் வீட்டின் கதவு பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. கொள்ளையர்கள் எவ்வாறு வீட்டுக்குள் புகுந்து திருடிச் சென்றனர் என்பது தெரியாமல் அவர்கள் குழம்பினர். தாசில்தாருக்கு தெரிந்த நபர்கள் யாரும் கைவரிசை காட்டியுள்ளனரா? என தெரியவில்லை.
இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் நாகல்நகர் பால்சாமி அய்யர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் தாஜூதீன். இவர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு தாஜூதீன் மற்றும் அவரது மனைவி ஷாகிதா பானு ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டனர்.
இன்று காலை எழுந்து பார்த்தபோது ஷாகிதா பானுவின் 6½ பவுன் தங்க சங்கிலி மற்றும் தாஜூதீன் பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தாசில்தார் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் வீட்டின் கதவு பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. கொள்ளையர்கள் எவ்வாறு வீட்டுக்குள் புகுந்து திருடிச் சென்றனர் என்பது தெரியாமல் அவர்கள் குழம்பினர். தாசில்தாருக்கு தெரிந்த நபர்கள் யாரும் கைவரிசை காட்டியுள்ளனரா? என தெரியவில்லை.
இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X