search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தீபாவளிவரை ஒத்திவைப்பு
    X

    ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தீபாவளிவரை ஒத்திவைப்பு

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தீபாவளி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் நடைபெறும் இந்த ஆணையத்தில் தினமும் சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. இதில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது.

    சமீபத்தில் டி.டிவி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் அந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காக வக்கீல்கள் தீவிரமாக இருப்பதால் இன்றும், நாளையும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய வழக்குகளில் ஆஜராக இயலாது என்று கூறி ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட ஆணையம் இன்றும், நாளையும் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

    ஏற்கனவே விசாரணை ஆணையத்துக்கு 4, 5,6, 7 ஆகிய நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் ஆணைய விசாரணை தீபாவளிக்கு பிறகு தான் நடைபெறும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். #JayaDeathProbe
    Next Story
    ×