search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யலாம்- ஜிகே வாசன்
    X

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யலாம்- ஜிகே வாசன்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #TamilMaanilaCongress #GKVasan #MLAsDisqualificationCase
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். பிறகு இந்த வழக்கு 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டது.

    இன்றைக்கு வெளிவந்திருக்கும் 3-வது நீதிபதியின் தீர்ப்பின் மூலம் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து தான் இறுதி முடிவு கிடைக்கும்.

    தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இறுதியான தீர்ப்பினால் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    இந்த பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan  #MLAsDisqualificationCase
    Next Story
    ×