search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் வாகனம் மோதி பலி
    X

    வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் வாகனம் மோதி பலி

    வேப்பூர் அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் பாலவிளையை சேர்ந்தவர் அஜீத்ஜோகி (வயது 21). இவரது உறவினர் வினோத் (21). இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இருவரும் சொந்த ஊர் சென்றிருந்தனர். விடுமுறை முடிந்ததும் நேற்று மதியம் அஜித்ஜோகி, வினோத் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலவிளையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அஜீத்ஜோகி, வினோத் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிமேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வாலிபர்கள் மீது மோதிய வாகனம் எது? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×