என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளை கவர சிறப்பு வசதிகள்
சென்னை:
சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.
பயணிகள், பொது மக்கள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோரெயில் நிர்வாகம் உருவாக்கிஉள்ளது.
வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஓவிய கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக பல்வேறு விளையாட்டு முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக, பாரம்பரியங்கள் குறித்த புகைப்பட, ஓவிய காட்சிகள் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் தொடங்கி வைத்தார். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதனை பொது மக்கள், பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்