என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை கொள்ளை
Byமாலை மலர்29 Aug 2018 8:16 AM GMT (Updated: 29 Aug 2018 8:16 AM GMT)
புதுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீரப்பட்டியை சேர்ந்தவர் நேரு (வயது 28). இவரது மனைவி லாவண்யா (23). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு கைக்குழந்தை உள்ளது. நேரு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் லாவண்யா குழந்தையுடன் வீரப்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து லாவண்யா வெளியே வரவில்லை. குழந்தையின் அழுகை சத்தம் மட்டும் கேட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டிற்குள் லாவண்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து உடனடியாக திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது வீட்டிற்குள் பல்வேறு பொருட்கள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தது. நகை மற்றும் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனால் மர்ம நபர்கள் லாவண்யாவை அடித்து கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வந்தது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து கொண்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதே போல் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
லாவண்யாவின் வீடு அப்பகுதியில் தனியாக உள்ளது. வீட்டை சுற்றி எந்த வீடுகளும் கிடையாது. மேலும் அவரது பெற்றோர் தனியாக வசித்து வந்தனர். இதனால் லாவண்யா மட்டும் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் நேற்றிரவு அங்கு சென்று கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
லாவண்யா நகைகளை கொடுக்க மறுத்து போராடவே ஆத்திரத்தில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கற்பழிப்பு முயற்சியில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீரப்பட்டியை சேர்ந்தவர் நேரு (வயது 28). இவரது மனைவி லாவண்யா (23). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு கைக்குழந்தை உள்ளது. நேரு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் லாவண்யா குழந்தையுடன் வீரப்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து லாவண்யா வெளியே வரவில்லை. குழந்தையின் அழுகை சத்தம் மட்டும் கேட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டிற்குள் லாவண்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து உடனடியாக திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது வீட்டிற்குள் பல்வேறு பொருட்கள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தது. நகை மற்றும் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனால் மர்ம நபர்கள் லாவண்யாவை அடித்து கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வந்தது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து கொண்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதே போல் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
லாவண்யாவின் வீடு அப்பகுதியில் தனியாக உள்ளது. வீட்டை சுற்றி எந்த வீடுகளும் கிடையாது. மேலும் அவரது பெற்றோர் தனியாக வசித்து வந்தனர். இதனால் லாவண்யா மட்டும் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் நேற்றிரவு அங்கு சென்று கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
லாவண்யா நகைகளை கொடுக்க மறுத்து போராடவே ஆத்திரத்தில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கற்பழிப்பு முயற்சியில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X