என் மலர்
செய்திகள்

நீதிமன்ற தடை உத்தரவு வரவேற்க கூடியது- திருமாவளவன் கருத்து
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். #GreenwayExpress #Thirumavalavan
சென்னை:
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் யாவும் எதிர்ப்பு தெரிவித்தும்கூட நிலம் கையகப்படுத்தும் பணியை செய்து வந்தது. அதற்கு இப்போது சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருப்பது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.
தமிழக அரசு இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடாது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது போல் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #GreenwayExpress #Thirumavalavan
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் யாவும் எதிர்ப்பு தெரிவித்தும்கூட நிலம் கையகப்படுத்தும் பணியை செய்து வந்தது. அதற்கு இப்போது சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருப்பது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.
தமிழக அரசு இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடாது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது போல் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #GreenwayExpress #Thirumavalavan
Next Story






