search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்பு உடன் பிறப்புகளே என்று கருணாநிதி மீண்டும் பேசுவார்- குஷ்பு நம்பிக்கை
    X

    அன்பு உடன் பிறப்புகளே என்று கருணாநிதி மீண்டும் பேசுவார்- குஷ்பு நம்பிக்கை

    என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று கருணாநிதி மீண்டும் தொண்டர்கள் மத்தியில் பேசுவார் என்று குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். #DMKLeader #Karunanidhi #Khushboo
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று காவேரி ஆஸ்பத்திரி சென்று கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தார்.

    பின்னர் குஷ்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கோடிக்கணக்கான தமிழக மக்களும், தி.மு.க.வினரும் கருணாநிதி மீண்டும் உடல் நலம் பெற்று திரும்புவார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.

    அவர் பூரண நலம் பெற்று திரும்புவார். என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று அவர் மீண்டும் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMKLeader #Karunanidhi #Khushboo
    Next Story
    ×