search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர்-தாம்பரம் இடையே மீண்டும் மாநகர பஸ் இயக்கப்படுமா? போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்
    X

    திருவள்ளூர்-தாம்பரம் இடையே மீண்டும் மாநகர பஸ் இயக்கப்படுமா? போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்

    திருவள்ளூரில் இருந்து தாம்பரத்துக்கு இடையே மீண்டும் மாநகர பஸ் இயக்கப்படுமா? என்பது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். #Minister #MRVijayabaskar
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர் தொகுதி) துணை கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, ‘ திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வரை 566 ஏ என்ற எண் கொண்ட 5 நகர பஸ்கள் நாள்தோறும் 10 நடைகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 6 மாதகாலமாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு, திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி வரை 597 ஏ என்ற எண் கொண்ட பஸ்கள் தான் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூரில் இருந்து தாம்பரத்துக்கு வேலைநிமித்தமாக ஏழை-எளிய மக்களுக்கும், படிப்புநிமித்தமாக மாணவர்களும் சென்று கொண்டிருக்கக் கூடிய இந்த வேளையில் 6 மாதகாலமாக நிறுத்தப்பட்டதை மாற்றி திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வரை மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?’ என்று கேட்டார்.

    அதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசும்போது ‘அந்த வழித்தடத்தில் பயணிகளின் அடர்வினை ஆய்வு செய்து, தேவை இருந்தால் பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அரசு ஆவன செய்யும்’ என்று தெரிவித்தார். #Minister #MRVijayabaskar
    Next Story
    ×