search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறவன்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சாய்ந்து கிடக்கும் வாழைகள்.
    X
    குறவன்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சாய்ந்து கிடக்கும் வாழைகள்.

    கோபி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை - 10 ஆயிரம் வாழைகள் நாசம்

    கோபி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததையடுத்து ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தன.
    கோபி:

    ஈரோடுமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

    கோபி அருகே உள்ள நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிங்காட்டுப்புதூர் முள்ளங்கரை அய்யம்புதூர் செல்வபுரம்காலனி உள்பட பல பகுதிகளில் நேற்று கனமழை மற்றும் சூறாவளிக் காற்றும் வீசியது.

    இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தது.

    கடந்த ஆண்டுகளில் போதிய தண்ணீர் இல்லாததினால் விவசாயம் செழிக்காத நிலையில் விவசாயிகள் பெரும் வேதனைக்குள்ளாகினர். அதனை ஈடுகட்டும் வகையில் இந்தாண்டு வாழைமஞ்சள் என பயிர் செய்து வாங்கியுள்ள கடன்களை அடைத்துவிடலாம் என்று எண்ணி இருந்தனர்.

    தற்போது அடித்த சூறாவளிக் காற்றினால் அந்த எண்ணமும் சிதைந்து விட்டதாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அதேபோல் செல்வபுரம் காலனியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குஅடித்த சூறாவளிக்காற்றினால் வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து அவை காற்றில் தூக்கிவீசப்பட்டது.

    இதில் மேற்க்கூரை ஓடுகள் மற்றும் சிமெண்ட் அட்டைகள் 500 அடி தூரத்திற்கும் மேல் தூக்கிவீசப்பட்டது. இதனால் அப்பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சூறாவளிக்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்துமின் கம்பிகள் அறுந்ததால் நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

    இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றியும் வீடுகளில் மேற்கூரை இன்றியும் தவித்துள்ளனர். தினக்கூலிக்கு செல்லும் தங்களது வீடுகள் சேதமடைந்துள்ளதை புதுப்பிக்க வீடுகளின் மேற்கூரைகளை இழந்துதவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    Next Story
    ×