search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கான பணிகள்- இந்திய தொழில் கூட்டமைப்பு தகவல்
    X

    தமிழகத்தில் 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கான பணிகள்- இந்திய தொழில் கூட்டமைப்பு தகவல்

    தமிழகத்தில் 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியுள்ளது.
    சென்னை:

    இந்திய தொழில் கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டல நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழ்நாடு அரசு சார்பில் எளிதான தொழில் செயல்பாடுகளுக்கான ஒரு இணையதளத்தை தயார் செய்ததற்காகவும், அது நல்லமுறையில் இருப்பதற்காகவும் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டலத்தின் நிர்வாகிகள் சார்பில் நன்றி தெரிவித்தோம். மேலும் இந்த இணையதளம் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்தோம்.

    இந்த இணையதளத்தை 29 நிறுவனங்கள் ஏற்கனவே உபயோகிக்கின்றனர். அதில், அனைவருக்கும் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. எனவே, அதை தொடரலாம். சி.ஐ.ஐ.யின் மாடல் கேரியட் சென்டர் மூலம் 4 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் இதுபோல ஒரு இணையதளம் தயார் செய்துள்ளனர். அதுவும் நல்லமுறையில் உள்ளது. மேலும், அதனுடைய செயலாக்கத்தை இன்னும் சிறப்பாக உயர்த்தப் போவதாக கூறினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ஆர்.தினேஷ் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி:- எளிதாக தொழிலாற்றுவதற்காக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் ஒரு இணையதளம் தயார் செய்துள்ளதாக கூறினீர்களே, அதன் மூலம் சிறு தொழில்கள் வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறதா?

    பதில்:- ரூ.10 கோடி முதலீட்டிற்கு குறைவாக உள்ள சிறு தொழில் முனைவோர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பித்தால் கட்டணம் கிடையாது. இந்த தகவல் மக்களை சென்றடைய வேண்டும். இதில், விண்ணப்பிக்கும்போது, பல துறைகளுக்கு ஒப்புதலுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு இடத்தில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அனைத்துத்துறை ஒப்புதல்களும் பெறப்பட்டு வந்துவிடும்.

    முதல்-அமைச்சர் தொடங்கியதை, சிறு தொழில் முனைவோர்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். எளிதாக தொழிலாற்றுவது குறித்து நாங்கள் சென்றமுறை வழங்கிய ஆலோசனைகளையும் சேர்த்துள்ளனர். இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    கேள்வி:- தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு இருக்கிறதா? அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கின்றதா?

    பதில்:- இப்போது, தொழில் வழிச் சாலைகள், சாலைகள், விமான போக்குவரத்து போன்றவற்றில் அரசால் செய்யப்பட்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்ந்தால் நிச்சயம் திருப்தி கிடைக்கும். விமான நிலையங்களுக்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கிறது. 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்காக இணைப்பு என்று பார்த்தால், துறைமுகங்கள், சாலைகள், ரெயில், விமானம் ஆகியவை உள்ளன. இப்போது சென்னை மட்டுமல்லாமல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலத்தில்கூட, இரவிலும் விமானங்களை இயக்கும் வசதிக்கு நாங்கள் பரிந்துரை செய்திருக்கின்றோம். அனைத்து வகையிலும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்திய தொழில் கூட்டமைப்பில் ஆலோசித்து, வழிவகுத்து கொடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×