search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை அருகே அரசு பஸ் மீது பாய்ந்து விழுந்த பைக்
    X

    வடமதுரை அருகே அரசு பஸ் மீது பாய்ந்து விழுந்த பைக்

    வடமதுரை அருகே அரசு பஸ் மீது பாய்ந்து விழுந்த மோட்டார் சைக்கிளால் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல்லில் இருந்து அறந்தாங்கிக்கு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை குன்னக்குடியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 42) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    வடமதுரை அருகே நேற்று இரவு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த ஒரு வாலிபர் பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக பைக்கை திருப்பினார்.

    எதிர்பாராதவிதமாக பைக் சினிமா காட்சிகளில் வருவதைப் போல பறந்து வந்து பஸ்சின் முன் பக்க கண்ணாடியில் மோதியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஊராளிப் பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (வயது 30) என்பவர் படுகாயமடைந்தார். இவர் போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது.

    படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ் சேதமடையவே அதில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×