என் மலர்
செய்திகள்

விருத்தாசலம் அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி- பேதி
விருத்தாசலம் அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பக்தர்கள் திடீரென்று வாந்தி- பேதியால் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.சாத்தமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக சித்திரை மாத திருவிழா நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று நடந்தது. இதை காண விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வெகுநேரமாகி விட்டதால் சில பக்தர்கள் கோவிலிலேயே தங்கினர்.
இந்த நிலையில் அன்னதானம் சாப்பிட்டு விட்டு கோவிலில் தங்கிருந்த பக்தர்கள் 20 பேருக்கு நள்ளிரவில் திடீரென்று வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை தொடர்ந்து அன்னதானம் சாப்பிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 180 பேருக்கும் வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் வாகனங்களில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ஸ்ரீதரன், கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கிருந்த டாக்டர்களிடம் சிகிச்சை சம்பந்தமாக விளக்கம் கேட்டறிந்தனர்.

சம்பவம் நடந்த கோவிலுக்கு வருவாய்த்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலில் சமையல் செய்த இடம், பாத்திரங்கள் மற்றும் அன்னதானத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும், அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் சாப்பிட்ட உணவில் பல்லி ஏதும் விழுந்து இருக்கலாமோ என்றும் விசாரணை நடத்தினர்.
மேலும் கோவில் திருவிழா நடந்து வரும் கிராமத்தில் கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புலிகேசி தலைமையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் தண்டபாணி, சுகாதார நலப்பணிகள் மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மாதவி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் விரைந்தனர்.
அவர்கள் திருவிழா நடந்த கோவில் மற்றும் வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை பார்வையிட்டு விசாரித்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.சாத்தமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக சித்திரை மாத திருவிழா நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று நடந்தது. இதை காண விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வெகுநேரமாகி விட்டதால் சில பக்தர்கள் கோவிலிலேயே தங்கினர்.
இந்த நிலையில் அன்னதானம் சாப்பிட்டு விட்டு கோவிலில் தங்கிருந்த பக்தர்கள் 20 பேருக்கு நள்ளிரவில் திடீரென்று வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை தொடர்ந்து அன்னதானம் சாப்பிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 180 பேருக்கும் வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் வாகனங்களில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ஸ்ரீதரன், கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கிருந்த டாக்டர்களிடம் சிகிச்சை சம்பந்தமாக விளக்கம் கேட்டறிந்தனர்.

சம்பவம் நடந்த கோவிலுக்கு வருவாய்த்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலில் சமையல் செய்த இடம், பாத்திரங்கள் மற்றும் அன்னதானத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும், அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் சாப்பிட்ட உணவில் பல்லி ஏதும் விழுந்து இருக்கலாமோ என்றும் விசாரணை நடத்தினர்.
மேலும் கோவில் திருவிழா நடந்து வரும் கிராமத்தில் கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புலிகேசி தலைமையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் தண்டபாணி, சுகாதார நலப்பணிகள் மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மாதவி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் விரைந்தனர்.
அவர்கள் திருவிழா நடந்த கோவில் மற்றும் வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை பார்வையிட்டு விசாரித்தனர்.
Next Story






