என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் போராட்டம் நடத்த முயன்ற முகநூல் நண்பர்கள் குழுவினர் கைது
    X

    கடலூரில் போராட்டம் நடத்த முயன்ற முகநூல் நண்பர்கள் குழுவினர் கைது

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடலூரில் போராட்டம் நடத்த முயன்ற முகநூல் நண்பர்கள் குழுவினரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரியும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அதுபோல் மாணவர்களும் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை முகநூல் நண்பர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த வந்துள்ளோம். போராட்டம் முடிந்ததும் நாங்கள் அங்கிருந்து கலைந்து சென்று விடுவோம் என்றனர்.

    ஆனால், இங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என போலீசார் திட்ட வட்டமாக அறிவித்தனர். ஆனால், அவர்கள் நாங்கள் போராட்டம் செய்து விட்டுதான் செல்வோம் என உறுதியாக கூறினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் அங்கு கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு முகநூல் நண்பர்கள் குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முகநூல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×