என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்- 2 பேர் பலி
    X

    சிதம்பரம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்- 2 பேர் பலி

    சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சிதம்பரம்:

    புதுவையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி ஒரு கார் புறப்பட்டது. அந்த காரில் 2 பேர் இருந்தனர். இன்று 11 மணி அளவில் அந்த கார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புறவழி சாலையில் தண்டேஸ்வரநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது காரைக்காலில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம் பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் இறந்த 2 பேரும் புதுவையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×