என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவன் உள்பட 3 பேர் பலி
    X

    மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவன் உள்பட 3 பேர் பலி

    மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த அபிராமிபுரத்தை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 30). கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை அவரை மதுராந்தகம் பஸ் நிலையத்தில் விடுவதற்காக அதே பகுதியை சேர்ந்த சரவணன் (22), மூர்த்தி (17) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

    மதுராந்தகம் அருகே பைபாஸ் சாலையை கடந்த போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. அதிலிருந்த சின்ராஜ், சரவணன், மூர்த்தி ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் பலியான மூர்த்தி பிளஸ்-1 மாணவர் ஆவார்.

    இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×