என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
    X

    ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

    ஜெயங்கொண்டம் அருகே இன்று ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 60). இவர் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே அன்பழகனுக்கு செந்துறை அருகே உள்ள சேரன்குடிகாட்டை சேர்ந்த சிவஞானம் என்ற (45) பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அதுவே கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. அன்பழகன், சிவஞானத்துடன் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். வசந்தா தனது மகன் சாமிநாதனுடன் ஒக்கநத்தம் கிராமத்தில் வசித்தார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலையில் வசந்தாவுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் உங்களது கணவர் அன்பழகன் வேலாயுதநகரில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இது குறித்து வசந்தா ஜெயங்கொண்டம் போலீசுக்கு தகவல் கொடுத் தார்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது வீட்டின் குளியறையில் கைலியில் தூக்கு போட்ட நிலையில் அன்பழகன் பிணமாக தொங்கினார். உடனே ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வசந்தா போலீசில் அளித்த புகாரில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக கூறி உள்ளார். அன்பழகன் இறந்தவுடன் அவரது கள்ளக்காதலி சிவஞானம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அன்பழகன் கள்ளத்தொடர்பு பிரச்சனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    Next Story
    ×