search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் மாட்டு வண்டியில் வந்து எம்.எல்.ஏ. மறியல்
    X

    காஞ்சீபுரத்தில் மாட்டு வண்டியில் வந்து எம்.எல்.ஏ. மறியல்

    பஸ் கட்டண உயர்வினை திரும்பப் பெறக்கோரி காஞ்சீபுரத்தில் மாட்டு வண்டியில் வந்து மறியலில் ஈடுப்பட்ட எம்.எல்.ஏ. எழிலரசன் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    காஞ்சீபுரம்:

    பஸ் கட்டண உயர்வினை திரும்பப் பெறக்கோரி காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. மாணவரணி செயலாளரும் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் மறியல் நடந்தது.

    முன்னதாக எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.

    இதில் நிர்வாகிகள் வெங்கடேசன். வழக்கறிஞர் செல்வம், ஜெகந்நாதன், விஸ்வநாதன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. எழிலரசன் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நகரச் செயலாளர் ஞானசேகரன், செயற்குழு உறுப்பினர் நாதன், சோழனூர் ஏழுமலை, பாரிவள்ளல், நீல கண்டன் உள்ளிட்ட 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடியில் நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் தலைமையில் மறியல் நடந்தது.

    இதில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் மதியழகன் தலைமையில் காங்கிரசார் ஏராளமானோர் பங்கேற்றனர். சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பாலுச்செட்டி சத்திரம் அருகே ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார் தலைமையிலும், சிறுவேடல் பகுதியில் ஒன்றியச் செயலாளர் செல்வம் தலைமையிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. 200 பேர் கைதானார்கள்.

    செங்கல்பட்டு புதிய பஸ்நிலையம் அருகே தி.மு.க. நகர செயலாளர் நரேந்திரன் தலைமையில் மறியல் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மறைமலைநகரில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் சண்முகம், காங்கிரஸ் தனசேகரன், விடுதலை சிறுத்தைகள் தென்னவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சேஷாத்திரி, த.மு.க.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    கூடுவாஞ்சேரியில் தி.மு.க. நகர செயலாளர் எம்.கே.தண்டபாணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் மறியல் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    குன்றத்தூரில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அனபரசன் எம்.எல்.ஏ. மறியலில் ஈடுபட்டு கைதானார். இதேபோல் மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் கைது செய்யப்பட்டார்.

    மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்ட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

    பல்லாவரம் நகர தி.மு.க. சார்பில் குரோம்பேட்டை பஸ்நிலையம் அருகே இ.கருணாநிதி மறியல் போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் தீனதயாளன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொற்செழியன், ம.தி.மு.க.வை சேர்ந்த குரோம்பேட்டை நாசர், ரஜினி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஜீவா, ஜோசப் உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தாம்பரத்தில் மறியலில் ஈடுபட்ட எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., காங்கிரஸ் நகர தலைவர் விஜய் ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தேவஅருள் பிரகாசம், ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் உள்பட 500 பேர் கைதானார்கள்.

    திருவள்ளூரில் காமராஜர் சிலை அருகில் தி.மு.க. நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.எஸ்.கண்ணன், தி.மு.க. நிர்வாகிகள் பொன்பாண்டியன், டி.கே.பாபு, கமலக்கண்ணன் உள்ளிட்டோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் அவைத் தலைவர் திராவிட பக்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மணவாளநகர் அண்ணாசிலை அருகில் சாலை மறியலில்ஈடுபட்டனர். அவர்களை மணவாளநகர் போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் தேசிங்கு தலைமையில் வெள்ளவேட்டில் சாலை மறியல் நடந்தது.

    திருவள்ளூர் வடக்கு ஒன்றிய சார்பில் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஈக்காட்டிலும், திருவள்ளூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமையில் காக்களூரிலும் பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி தலைமையில் திருப்பாச்சூரிலும் மறியல் நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமையில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.

    தலைமை செயற்குழு உறுப்பினரும், கிழக்கு ஒன்றியசெயலாளருமான டி.ஜெ.கோவிந்தராசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சி.எச்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேற்கு ஒன்றியம் சார்பில் அதன் ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் தலைமையில் ஆரம்பாக்கத்திலும், மாதர் பாக்கம் பஸ் நிலையத்தில் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மனோகரன் ஆகியோர் தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு உயர்த்திய பஸ் கட்டணத்தை முழுமையாக குறைக்க கோரி தி.மு.க.வினர் போராட்த்தில் ஈடுபட்டனர். சீதஞ்சேரியில் நடந்த போராட்டத்துக்கு பூண்டி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் வெஸ்லி, குமார், பாலசுப்பிரமணி, சண்முகம், குப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டையில் பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் அப்துல்ரஷீத், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் கார்திக், சங்கர், சம்சுதீன், அப்துல்ரகீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருவொற்றியூரில் மாநில மீனவர் அணி செயலாளர். கே.பி.பி.சாமி தலைமையில் திருவொற்றியூர் பஸ்நிலையம் முன்பு சாலை மறியல் நடந்தது. இதில் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.சங்கர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பொன்னேரியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சுகுமாறன், பேரூர் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் மறியல் நடந்தது.

    மீஞ்சூரில் மோகன்ராஜ் தலைமையிலும், பழவேற்காட்டில் அலவி தலைமையிலும், ஜனப்பசத்திரத்தில் ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையிலும் மறியல் நடந்தது. அனைவரையும் கைது செய்தனர்.

    திருவள்ளூர் மாவட் டத்தில் மறியலில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    Next Story
    ×