என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே 7-ம் வகுப்பு மாணவன் தீக்குளிப்பு
    X

    காஞ்சீபுரம் அருகே 7-ம் வகுப்பு மாணவன் தீக்குளிப்பு

    காஞ்சீபுரம் அருகே பெற்றோர் திட்டியதால் 7-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன். அவரது மகன் காமேஷ் (வயது 12). படுநெல்லி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் சரியாக படிக்காமல் நண்பர்களுடன் விளையாடினார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனை அடைந்த காமேஷ் வீட்டு மாடியில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய காமேசுக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×