என் மலர்
செய்திகள்

மாமல்லபுரத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி
மாமல்லபுரம்:
கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் கல்யாண் (வயது 18), உபேந்திரா (18). இருவருக்கும் ஆந்திர மாநிலம் வாரங்கல் சொந்த ஊர் ஆகும்.
நேற்று மாலை 2 பேரும் உடன் படிக்கும் மாணவர்கள் 10 பேருடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தனர்.
அப்போது கல்யாண், உபேந்திரா ஆகிய இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
சிறிது நேரத்தில் கல்யாண் பிணமாக கரை ஒதுங்கினார். உபேந்திராவை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை புலிக்குகை கடற்கரையில் உபேந்திரா உடலும் கரை ஒதுங்கியது.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






