என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

    மாணவர்கள் எந்த ஒரு தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் 412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அச்சத்தை போக்க பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்காக பவளத்தாம்பாளையம் ஏ.இ. டி. பள்ளி வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பணியை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மன வேதனை அளிக்கிறது.

    மேலும் இது போன்று எந்த மாணவர்களும் தவறான முடிவை எடுக்கக்கூடாது. இதை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மாணவர்கள் எந்த ஒரு தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் 412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அச்சத்தை போக்க பயிற்சி அளிக்கப்படும்.

    மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் எதிர்காலத்தில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக அந்த பாடத்திட்டம் இருக்கும். இதில் பண்பாடு, கலாசாரம், தொன்மை ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

    நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 4 முறை பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசி உள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் பிரதமரிடம் இதுபற்றி பேசி உள்ளனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி மாவட்டம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 6-ந் தேதி ஈரோட்டில் விழா நடக்கிறது.

    ஈரோடு எப்போதும் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக விளங்கி வருகிறது. இதை தேர்தலில் நிரூபித்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணியம், ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×