என் மலர்
செய்திகள்

தீரன் சின்னமலை உருவபடத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சி.
அ.தி.மு.க.அணிகள் இணைய ஓ.பன்னீர்செல்வம் விருப்பம்
ஒரு தாய் மக்களாக வாழ வேண்டியது அவசியம் என்று கூறிய ஓ.பன்னீ செல்வம் அ.தி.மு.க.அணிகள் இணைய வேண்டும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை சென்றார்.
முன்னதாக கோவையிலிருந்து காரில் வந்த அவருக்கு பெருந்துறை அருகே உள்ள சிப்காட் பகுதியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவருடன் 50-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து வந்தது.
ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.கவின் 2 அணிகளும் இணைய வேண்டும் என சூசகமாக தெரிவித்தார். அரசியல் பற்றி கூற மறுத்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது.
பெற்ற சுதந்திரத்தை காக்க நாம் ஒன்று சேர வேண்டும் விறுப்பு-வெறுப்புகளை துறக்க வேண்டும். ஒரு தாய்மக்களாக வாழ வேண்டும். அது நமது கடமையும் ஆகும்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், மா.பா.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, செம்மலை ஆகியோரும் வந்திருந்தனர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை சென்றார்.
முன்னதாக கோவையிலிருந்து காரில் வந்த அவருக்கு பெருந்துறை அருகே உள்ள சிப்காட் பகுதியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவருடன் 50-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து வந்தது.
ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.கவின் 2 அணிகளும் இணைய வேண்டும் என சூசகமாக தெரிவித்தார். அரசியல் பற்றி கூற மறுத்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது.
பெற்ற சுதந்திரத்தை காக்க நாம் ஒன்று சேர வேண்டும் விறுப்பு-வெறுப்புகளை துறக்க வேண்டும். ஒரு தாய்மக்களாக வாழ வேண்டும். அது நமது கடமையும் ஆகும்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், மா.பா.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, செம்மலை ஆகியோரும் வந்திருந்தனர்.
Next Story






