என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏலகிரி மலையில் தேக்கு மரங்கள் வெட்டி போலீஸ் வேனில் கடத்தல்: 2 போலீஸ்காரர்கள் கைது
Byமாலை மலர்3 July 2017 5:48 AM GMT (Updated: 3 July 2017 5:48 AM GMT)
ஏலகிரி மலையில் தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் கடத்தியது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் கோட்டூர் என்ற பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நச்சுத் காப்புக் காடு உள்ளது. இதில் சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் உள்பட பல்வேறு வகை மரங்கள் ஏராளமாக அடர்ந்து வளர்ந்துள்ளன.
நச்சுத் காப்புக்காட்டில் நள்ளிரவு 1 மணியளவில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் ஏலகிரி மலைக்கு விரைந்து சென்றனர்.
காப்புக் காட்டிற்குள் வனத்துறையினர் நுழைந்த போது, ஆயுதப்படைக்கு சொந்தமான போலீஸ் வேன் நின்றிருந்தது. 10-க்கும் மேற்பட்ட கும்பல், தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் அடுக்கி கடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.
வனத்துறையினர் 2 பேரை பிடித்தனர். 8-க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடி விட்டனர். விசாரணையில், ஏலகிரி மலை நிலாவூரை சேர்ந்த வேல்முருகன் (வயது 28), பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளபட்டியை சேர்ந்த தம்பிதுரை (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பிடிபட்ட 2 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆயுதப்படை பிரிவு 7-வது பட்டாலியனில் போலீஸ்காரர்களாக பணி புரிவது தெரியவந்தது. போலீஸ் வேனில் தேக்கு மரங்களை கடத்தினால், யாருக்கும் சந்தேகம் வராது என்று திட்டமிட்டுள்ளனர்.
போலீஸ்காரர்கள் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், 2 டன் தேக்கு மரக்கட்டைகளை போலீஸ் வேனுடன் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் ஏலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் கோட்டூர் என்ற பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நச்சுத் காப்புக் காடு உள்ளது. இதில் சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் உள்பட பல்வேறு வகை மரங்கள் ஏராளமாக அடர்ந்து வளர்ந்துள்ளன.
நச்சுத் காப்புக்காட்டில் நள்ளிரவு 1 மணியளவில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் ஏலகிரி மலைக்கு விரைந்து சென்றனர்.
காப்புக் காட்டிற்குள் வனத்துறையினர் நுழைந்த போது, ஆயுதப்படைக்கு சொந்தமான போலீஸ் வேன் நின்றிருந்தது. 10-க்கும் மேற்பட்ட கும்பல், தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் அடுக்கி கடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.
வனத்துறையினர் 2 பேரை பிடித்தனர். 8-க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடி விட்டனர். விசாரணையில், ஏலகிரி மலை நிலாவூரை சேர்ந்த வேல்முருகன் (வயது 28), பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளபட்டியை சேர்ந்த தம்பிதுரை (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பிடிபட்ட 2 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆயுதப்படை பிரிவு 7-வது பட்டாலியனில் போலீஸ்காரர்களாக பணி புரிவது தெரியவந்தது. போலீஸ் வேனில் தேக்கு மரங்களை கடத்தினால், யாருக்கும் சந்தேகம் வராது என்று திட்டமிட்டுள்ளனர்.
போலீஸ்காரர்கள் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், 2 டன் தேக்கு மரக்கட்டைகளை போலீஸ் வேனுடன் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் ஏலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X