என் மலர்
செய்திகள்

ஜி.எஸ்.டி.யை எதிர்க்கவில்லை, கேளிக்கை வரியை மட்டுமே எதிர்க்கிறோம்: அபிராமி ராமநாதன்
மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசும் கேளிக்கை வரியை வசூலிப்பதால் பெரும் இழப்பை சந்திப்பதாக கூறி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ரூ.100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.100க்கு அதிகமாக டிக்கெட்களுக்கு 28 சதவீத வரியும் செலுத்த வேண்டியுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க தமிழக அரசு நேற்று புது சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக, ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 58 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி டிக்கெட் பணமாக ரூ.100 வசூலித்தால் அதில் 64 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். மீதம் உள்ள 36 ரூபாயைதான் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள்,
தயாரிப்பாளர்கள் பங்கிட்டு கொள்ள வேண்டியது இருக்கிறது. கூடுதல் வரியை மக்கள் மீது திணித்தால் தியேட்டருக்கு கூட்டம் வராது என்பதால், கேரள அரசை போல, தமிழகத்திலும் உள்ளாட்சி அமைப்பு வரிகளை ரத்து செய்ய வேண்டும் என நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ளார்.
தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், “ஜி.எஸ்.டி. அமலாகும் சமயத்தில், மாநில அரசின் உள்ளாட்சி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும்.
இதை தொடர்ந்து முன்பதிவை ஏற்கனவே ரத்து செய்துவிட்டோம். நாளையும், நாளை மறுதினமும் கவுண்டர்களில் ஏற்கனவே உள்ள கட்டணத்தை வசூலிக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்.
ஜி.எஸ்.டி வரியை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விதிக்கப்படும் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்க்கிறோம். கேரளாவைப் போன்று தமிழக அரசும் இந்த வரியை விலக்கிக் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ரூ.100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.100க்கு அதிகமாக டிக்கெட்களுக்கு 28 சதவீத வரியும் செலுத்த வேண்டியுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க தமிழக அரசு நேற்று புது சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக, ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 58 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி டிக்கெட் பணமாக ரூ.100 வசூலித்தால் அதில் 64 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். மீதம் உள்ள 36 ரூபாயைதான் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள்,
தயாரிப்பாளர்கள் பங்கிட்டு கொள்ள வேண்டியது இருக்கிறது. கூடுதல் வரியை மக்கள் மீது திணித்தால் தியேட்டருக்கு கூட்டம் வராது என்பதால், கேரள அரசை போல, தமிழகத்திலும் உள்ளாட்சி அமைப்பு வரிகளை ரத்து செய்ய வேண்டும் என நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ளார்.
தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், “ஜி.எஸ்.டி. அமலாகும் சமயத்தில், மாநில அரசின் உள்ளாட்சி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும்.
இதை தொடர்ந்து முன்பதிவை ஏற்கனவே ரத்து செய்துவிட்டோம். நாளையும், நாளை மறுதினமும் கவுண்டர்களில் ஏற்கனவே உள்ள கட்டணத்தை வசூலிக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்.
ஜி.எஸ்.டி வரியை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விதிக்கப்படும் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்க்கிறோம். கேரளாவைப் போன்று தமிழக அரசும் இந்த வரியை விலக்கிக் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
Next Story






