என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் 1500 போலீசாருக்கு இலவச மிக்சி-கிரைண்டர்
    X

    காஞ்சீபுரத்தில் 1500 போலீசாருக்கு இலவச மிக்சி-கிரைண்டர்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள போலீசாரின் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்ற பொருட்களை அரசின் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
    காஞ்சீபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள போலீசாரின் குடும்பங்களுக்கு, பொதுமக்களுக்கு வழங்கியதைபோல இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்ற பொருட்களை வழங்க அரசு உத்தர விட்டது.

    அதன்பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், வண்டலூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய உள் கோட்டங்களில் பணிபுரியும் 1500 போலீசாரின் குடும்பங்களுக்கு இந்த இலவச பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை காஞ்சீபுரத்தில் உள்ள ஆயுதபடை போலீஸ் பிரிவில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வழங்கினார். இந்த பொருட்களை பெற்றுக் கொண்ட போலீசாரின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சிடைந்தனர்.
    Next Story
    ×