என் மலர்
செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு: ஈரோடு மாவட்டத்தில் இன்று 5 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் பங்கேற்றுள்ளன. இதனால் ஜவுளி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.30 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜீலை முழுவதும் 1-ந் தேதி(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வர உள்ளது.
இதனால் சிறு, குறு தொழில் குறிப்பாக ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக அதன் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(15-ந் தேதி) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தன.
இதன்படி இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜவுளி கடைகள், ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
இது குறித்து ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் கூறும் போது.-
ஜி.எஸ்.டி.மூலம் ஜவுளி தொழிலுக்கும் அதன் சார்ந்த நிறுவனங்களுக்ம் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. வேட்டி, சேலை, ஜாடா, மல்லு போன்றவைகளுக்கு இது வரை வரி விதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.வரிவதிப்பு நடைமுறைக்கு வந்தால் 5 சதவீதம் வரி கொடுக்க வேண்டு இருக்கும்.
இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று நடந்த கடையடைப்பு போராட்டதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் பங்கேற்றுள்ளன. இதனால் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.30 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்கள் போராட்டத்திற்கு ஈரோடு இந்திரா நகர் பகுதி வணிகர் சங்கம், ஆல் டெக்ஸ்டைல் பிராசஸர்ஸ் அசோசியேசன், ஈரோடு வீரப்பன்சத்திரம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம், ஈரோடு மில் ஜவுளி வியாபாரிகள் சங்கம், ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன், ஈரோடு சலவைபட்டறை உரிமையாளர்கள் சங்கம் போன்ற சங்கங்கள் ஆதரவு தெரிவித்து எங்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
ஜவுளி நிறுவனங்களின் கடையடைப்பால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பிரப் ரோடு, ஆர்.கே.வி.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு போன்ற இடங்கள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக கனி மார்க்கெட் ஜவுளி சந்தை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் அமைதியாக காட்சி அளித்தது.
இதே போன்று பவானி, மொடக்குறிச்சி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜீலை முழுவதும் 1-ந் தேதி(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வர உள்ளது.
இதனால் சிறு, குறு தொழில் குறிப்பாக ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக அதன் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(15-ந் தேதி) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தன.
இதன்படி இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜவுளி கடைகள், ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
இது குறித்து ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் கூறும் போது.-
ஜி.எஸ்.டி.மூலம் ஜவுளி தொழிலுக்கும் அதன் சார்ந்த நிறுவனங்களுக்ம் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. வேட்டி, சேலை, ஜாடா, மல்லு போன்றவைகளுக்கு இது வரை வரி விதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.வரிவதிப்பு நடைமுறைக்கு வந்தால் 5 சதவீதம் வரி கொடுக்க வேண்டு இருக்கும்.
இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று நடந்த கடையடைப்பு போராட்டதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் பங்கேற்றுள்ளன. இதனால் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.30 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்கள் போராட்டத்திற்கு ஈரோடு இந்திரா நகர் பகுதி வணிகர் சங்கம், ஆல் டெக்ஸ்டைல் பிராசஸர்ஸ் அசோசியேசன், ஈரோடு வீரப்பன்சத்திரம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம், ஈரோடு மில் ஜவுளி வியாபாரிகள் சங்கம், ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன், ஈரோடு சலவைபட்டறை உரிமையாளர்கள் சங்கம் போன்ற சங்கங்கள் ஆதரவு தெரிவித்து எங்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
ஜவுளி நிறுவனங்களின் கடையடைப்பால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பிரப் ரோடு, ஆர்.கே.வி.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு போன்ற இடங்கள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக கனி மார்க்கெட் ஜவுளி சந்தை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் அமைதியாக காட்சி அளித்தது.
இதே போன்று பவானி, மொடக்குறிச்சி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
Next Story






