என் மலர்
செய்திகள்

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுடன் ஓடும் வெள்ளப் பெருக்கு.
சாயக்கழிவு கலந்து ஓடும் நொய்யல் ஆற்று வெள்ளம்: விவசாயிகள் அதிர்ச்சி
நொய்யல் ஆற்று வெள்ளம் சாயக்கழிவுடன் கலந்து வருவதால் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னிமலை:
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வெள்ளியங்கிரி மலை பகுதியில் தற்போது மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த தண்ணீருடன் சாயக் கழிவும் கலந்து வருகிறது. இது நொய்யல் ஆற்றுப்படுகை விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் பகுதியில் பின்னலாடை சாயப்பட்டறைகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோர்ட்டு உத்திரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூரில் அதிகாரிகள் கடும் சோதனை நடத்தி பல சாயப்பட்டறைகளை மூடிவிட்டனர். ஆனாலும் தற்போதும் மழை நீருடன் சாயக்கழிவு ஆற்றில் கலந்து தான் வருகிறது.
தற்போது கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் இந்த தண்ணீரையும் விடாமல் பயன்படுத்துகிறார்கள். டீசல் என்ஜின் மூலம் தண்ணீரை எடுத்து தென்னை மரத்திற்கு பாய்ச்சுகின்றனர்.
சாயக்கழிவு கலந்து வரும் தண்ணீரால் பாதிப்பு அதிகம் என்று கூறும் விவசாயிகள், இந்த தண்ணீர் நிலத்தடியில் இறங்கி கிணற்று நீரும் மாசுபடும் நிலை உள்ளது என புலம்புகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வெள்ளியங்கிரி மலை பகுதியில் தற்போது மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த தண்ணீருடன் சாயக் கழிவும் கலந்து வருகிறது. இது நொய்யல் ஆற்றுப்படுகை விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் பகுதியில் பின்னலாடை சாயப்பட்டறைகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோர்ட்டு உத்திரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூரில் அதிகாரிகள் கடும் சோதனை நடத்தி பல சாயப்பட்டறைகளை மூடிவிட்டனர். ஆனாலும் தற்போதும் மழை நீருடன் சாயக்கழிவு ஆற்றில் கலந்து தான் வருகிறது.
தற்போது கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் இந்த தண்ணீரையும் விடாமல் பயன்படுத்துகிறார்கள். டீசல் என்ஜின் மூலம் தண்ணீரை எடுத்து தென்னை மரத்திற்கு பாய்ச்சுகின்றனர்.
சாயக்கழிவு கலந்து வரும் தண்ணீரால் பாதிப்பு அதிகம் என்று கூறும் விவசாயிகள், இந்த தண்ணீர் நிலத்தடியில் இறங்கி கிணற்று நீரும் மாசுபடும் நிலை உள்ளது என புலம்புகின்றனர்.
Next Story






