என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உழவன் எக்ஸ்பிரசில் என்ஜின் கோளாறு: 3 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் - பயணிகள் அவதி
Byமாலை மலர்1 Jun 2017 4:03 AM GMT (Updated: 1 Jun 2017 4:19 AM GMT)
சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்ற உழவன் எக்ஸ்பிரசில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 3 ரெயில்கள் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
தஞ்சாவூர்:
சென்னையில் இருந்து தஞ்சைக்கு நேற்று இரவு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் இன்று காலை 7 மணிக்கு நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உழவன் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆடுதுறையில் வாரணாசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரசும், கும்பகோணத்தில் மைசூர் எக்ஸ்பிரசும், தஞ்சையில் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சுமார் 1½ மணி நேரமாக ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். மயிலாடுதுறையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு செல்லப்பட்டு உழவன் எக்ஸ்பிரசில் இணைத்து அதனை இயக்கிய பின்னர் மற்ற ரெயில்கள் புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து தஞ்சைக்கு நேற்று இரவு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் இன்று காலை 7 மணிக்கு நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உழவன் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆடுதுறையில் வாரணாசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரசும், கும்பகோணத்தில் மைசூர் எக்ஸ்பிரசும், தஞ்சையில் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சுமார் 1½ மணி நேரமாக ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். மயிலாடுதுறையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு செல்லப்பட்டு உழவன் எக்ஸ்பிரசில் இணைத்து அதனை இயக்கிய பின்னர் மற்ற ரெயில்கள் புறப்பட்டு சென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X